25 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த கூட்டணி… துபாயில் நடந்த பூஜை!

vinoth
புதன், 27 ஆகஸ்ட் 2025 (09:35 IST)
தமிழ் சினிமாவில் நடன அமைப்பாளராக இருந்து, ஹீரோவாக  பல படங்களில் நடித்த பின்னர் போக்கிரி படம் மூலம் வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தவர் பிரபுதேவா. இவர் பாலிவுட் சென்று அங்கும் வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தார். ஆனால், அவரது சமீபத்தைய படங்கள் எதுவும் வெற்றிபெறவில்லை.

அதனால் அவர் மீண்டும் நடிப்பு பாதைக்குத் திரும்பியுள்ளார். இதையடுத்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்து வந்தார். ஆனால் அதில் எந்த படங்களும் பெரிதாக அவருக்கு திருப்புமுனையாக அமையவில்லை. ஒரு திருப்புமுனைப் படத்துக்காக அவர் காத்திருக்கிறார்.

இந்நிலையில் பிரபுதேவா தன்னுடைய வெற்றி நகைச்சுவைக் கூட்டணியான பிரபுதேவா மற்றும் வடிவேலு ஆகியோர் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர். இந்த படத்தை சாம் ரோட்ரிக்யூஸ் இயக்குகிறார். துபாயைச் சேர்ந்த தமிழ் தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் பூஜை துபாயில் சில நாட்களுக்கு முன்னர் நடந்துள்ளது. படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இந்த படத்தின் மூலம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா மற்றும் வடிவேலு கூட்டணி இணையவுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு ஆதரவாக இயக்குனரும் ஹீரோவும் பேசவில்லை: நடிகை கெளரி கிஷன் ஆதங்கம்..!

மகளிர் கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை வெற்றி.. அனுஷ்கா ஷர்மாவுக்கு அடித்த ஜாக்பாட்..!

இயக்குனர் ராஜ் உடன் கட்டிப்பிடித்த போட்டோவை வெளியிட்ட சமந்தா.. காதல் உறுதியா?

பிக்பாஸ் தமிழ் 9: அதிரடி டபுள் எவிக்ஷன்.. இந்த வாரம் வெளியேறுபவர்கள் யார் யார்?

Thalaivar 173: சுந்தர்.சிக்கு டபுள் சேலரி!.. ரஜினி படத்தின் மொத்த பட்ஜெட் இவ்வளவு கோடியா?..

அடுத்த கட்டுரையில்
Show comments