Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாழை 2 படம் கண்டிப்பாக வரும்… இயக்குனர் மாரி செல்வராஜ் பதில்!

vinoth
செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (15:57 IST)
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியான ‘வாழை’ இந்தாண்டின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இந்த படத்தில் கலையரசன், நிக்கிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, மாரி செல்வராஜ் ஹாட்ஸ்டார் நிறுவனத்தோடு இணைந்து தயாரித்துள்ளார்.

இந்த படம் ரசிகர்கள் உணர்ச்சி ரீதியாக உடைந்துவிடும் அளவுக்கு உருவாக்கப்பட்டிருந்தது. இதனால் படம் பார்த்த பலரும் வெளிவரும் அழுதுகொண்டே வெளியே வந்தனர். ரசிகர்களின் பாராட்டு வார்த்தைகளால் படத்துக்கு வரும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே சென்றது. மூன்றாவது வாரத்திலும், கோட் ரிலீஸுக்குப் பின்னரும் கணிசமான தியேட்டர்களில் இந்த படம் ஓடிவருவதே இதன் வெற்றியை கோடிட்டு காட்டுகிறது. இதையடுத்து சமீபத்தில் படக்குழிவினர் 25 ஆவது நாள் வெற்றி விழாவைக் கொண்டாடினர்.

நிகழ்ச்சியில் பேசிய மாரி செல்வராஜ் “மாரி செல்வராஜ் என்பவன் யார் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என எடுக்கப்பட்ட படம்தான் வாழை. அதிலும் அவர்களுக்கு குழப்பம் இருந்தால் வாழை 2 கண்டிப்பாக வரும். அந்த கதை இன்னும் நல்ல புரிதலை என்னைப் பற்றி மக்களுக்கு வழங்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹேமா கமிஷனில் வாக்குமூலம் அளித்த 20 சாட்சிகள்.. சிக்கலில் திரையுலக பிரபலங்கள்..!

தனுஷின் 52வது படத்தின் டைட்டில் இதுதான்.. இசையமைப்பாளர் யார்?

நடிகைகள் குறித்து அவதூறுப் பேச்சு: மன்னிப்பு கோரினார் டாக்டர் காந்தராஜ்

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் துஷாராவின் ஸ்டைலிஷான போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments