Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

“பா.இரஞ்சித் படத்தில் பணியாற்றுவதே மிகப்பெரிய வெற்றிதான்” – பாடலாசிரியர் உமாதேவி

“பா.இரஞ்சித் படத்தில் பணியாற்றுவதே மிகப்பெரிய வெற்றிதான்” – பாடலாசிரியர் உமாதேவி
, வியாழன், 25 மே 2017 (17:55 IST)
“பா.இரஞ்சித் இயக்கும் படத்தில் பணியாற்றுவதே மிகப்பெரிய வெற்றிதான்” எனத் தெரிவித்துள்ளார் கவிஞரும், பாடலாசிரியருமான உமாதேவி.


 

பா.இரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ படத்தில் ‘நான் நீ நாம் வாழவே…’ என்ற பாடலை எழுதியவர் உமாதேவி. சக்திஸ்ரீ கோபாலன் பாடிய இந்தப் பாடல் ஹிட்டானதைத் தொடர்ந்து, ‘கபாலி’ படத்திலும் ‘மாயநதி’, ‘வீரத் துறந்தரா’ என இரண்டு பாடல்களை எழுதினார். தற்போது ரஜினி நடிக்கும் ‘காலா’ படத்தின் மூலம் மூன்றாவது முறையாக பா.இரஞ்சித்துடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார் உமாதேவி.

இதுகுறித்து வெப்துனியா நிருபரிடம் பேசிய அவர், “பா.இரஞ்சித் சாரின் அடுத்த படத்திலும் பாடல் எழுதுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. இந்த வாய்ப்பைக் கொடுத்த பா.இரஞ்சித் சாருக்கு நன்றி. ரஜினி சாருக்கு மறுபடியும் பாடல் எழுதுவது மகிழ்ச்சியான விஷயம். பா.இரஞ்சித் சார் இயக்கும் படத்தில் பணியாற்றுவதே மிகப்பெரிய வெற்றிதான். எத்தனைப் பாடல்கள், எந்த மாதிரியான பாடல்கள் போன்ற விஷயங்கள் இனிமேல்தான் தெரியவரும்” என்று தெரிவித்துள்ளார் உமாதேவி.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘சூப்பர் பவர்’ கொண்ட உதயநிதி ஸ்டாலின்