Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் போட்டியாளர்கள் இருவருக்கு கொரோனா: தள்ளிப்போக வாய்ப்பு என தகவல்

Webdunia
ஞாயிறு, 20 செப்டம்பர் 2020 (19:12 IST)
பிக்பாஸ் போட்டியாளர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் அவர்களில் இருவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் இந்த நிகழ்ச்சி தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி அக்டோபர் 10ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் ரியோ, ரம்யா பாண்டியன், கிரண், சஞ்சனா, புகழ், ரக்சன், உள்பட பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர் என்பதும் அவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் இருவருக்கு சற்றுமுன் கொரோனா பாசிட்ட்வி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து பத்தாம் தேதி இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகாது என்றும், ஒரு வாரம் கழித்து இந்த நிகழ்ச்சி ஒளிபரப்ப வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
ஆனால் அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பதிலாக மாற்று போட்டியாளர்களை நியமனம் செய்யவும் பிக்பாஸ் நிர்வாகம் திட்டமிட்டு வருவதாகவும் திட்டமிட்டபடி அக்டோபர் 10ஆம் தேதி இந்த நிகழ்ச்சி தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments