Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த்ரிஷா நடித்த ‘தி ரோடு’: சிங்கிள் பாடல் ரிலீஸ்..!

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (18:31 IST)
நடிகை த்ரிஷா நடித்த ‘தி ரோடு என்ற திரைப்படம் வரும்  அக்டோபர் ஆறாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில்  இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடலான ஓ விதி என்ற பாடல் வெளியாகி உள்ளது. 
 
சித் ஸ்ரீராம் குரலில் உருவான இந்த பாடலை  கார்த்திக் நேதா என்பவர் எழுதியுள்ளார். சாம் சிஎஸ் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலின் வரிகள் இதோ:
 
ஓ விதி... யார் சதி.. யார் வலி..யார் ஒலி..
ஆசையின் காம்பிலே பூக்குதே மலரே மலரே
துயர் யாராலே..
 
ஈரம் உள்ள கூட்டில்
தீயை உமிழ்ந்தோர் யாரோ
பாதை வந்த வேளை
பாதம் கிழித்தோர் எவரோ
 
நீரில் இளைப்பாரும்
மீனின் கனவில்
ஒரு தூண்டில்
நிழல் ஆட்டும்
யாரின் விரலோ
யாவும் மாயையோ.
 
ஓ விதி... யார் சதி.. யார் வலி..யார் ஒலி..
ஆசையின் காம்பிலே பூக்குதே மலரே மலரே
துயர் யாராலே..
 
நேற்றிருந்த வாழ்வை
சூறை கொண்டு போச்சோ
வாங்கி வந்த நாளை
காலம் கொண்டே போச்சோ
சாம்பல் புயற்காற்றில்
ஓர் பறவை
அது சாவின் சுமையேறி
காணும் நிலவை
வாழ்வே வேலியோ..
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

நிகில் சித்தார்த்தா நடிப்பில்,ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா

ஒரு வழியாக இறுதிகட்டத்தை நெருங்கும் விடுதலை 2 ஷூட்டிங்!

ஷாலினிக்கு நடந்த அறுவை சிகிச்சை?... சென்னைக்கு திரும்பாமல் விடாமுயற்சி ஷூட்டிங்கில் அஜித்!

அடுத்த கட்டுரையில்
Show comments