Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலண்டனில் தொடங்கியது துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு !

Webdunia
செவ்வாய், 5 நவம்பர் 2019 (09:25 IST)
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு நேற்று லண்டனில் தொடங்கியுள்ளது.

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவான துப்பறிவாளன் படம் 2017 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்தப்படத்துக்கு இசையமைப்பாளராக முதலில் ஏ ஆர் ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் பின்னர் இளையராஜா இசையமைப்பார் என அறிவிக்கப்பட்டது. ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற நீரவ் ஷா ஒப்பந்தமாகியுள்ளார்.

ஷெர்லாக் ஹோல்ம்ஸ் துப்பறியும் நாவல்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப் பட்டுள்ள திரைக்கதைக்கு நம்பிக்கை சேர்க்கும் விதத்தில் இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள பேக்கர் தெரு (ஷெர்லாக் ஹோல்ம்ஸின் வீடு இருந்த இடம் ) படப்பிடிப்பு நடத்த மிஷ்கின் திட்டமிட்டார். இதற்காக லண்டன் சென்று பணிகளை மேற்கொண்டார்.
இதையடுத்து நேற்று லண்டனில் துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு நேற்று லண்டனில் தொடங்கியது. ஒரேக் கட்டமாக நடக்க இருக்கும் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பவுள்ளது படக்குழு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments