Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குடிபோதையில் நடு ரோட்டில் சண்டை போட்ட மனோபாலா... இறந்தும் சர்ச்சை கூறும் பயில்வான்!

குடிபோதையில் நடு ரோட்டில் சண்டை போட்ட மனோபாலா... இறந்தும் சர்ச்சை கூறும் பயில்வான்!
, வியாழன், 11 மே 2023 (21:25 IST)
கடந்த 80களில் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகம் ஆகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் மனோபாலா. ரஜினிகாந்த் நடித்த ஊர்க்காவலன் உள்பட பல திரைப்படங்களை இவர் இயக்கி உள்ளார் என்பதும் அதேபோல் சுமார் 1000 திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் இவர் இருந்துள்ளார். இதையடுத்து  கடந்த சில நாட்களாக உடல் நல குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனோபாலா இவர் கடந்த 3ம் தேதி சிகிச்சையின் பலன் இன்றி காலமானார். 
 
இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், மனோ பாலா ஒரு குடிகாரர் என்றும், 40 வருடங்களாக குடிக்கு அடிமையாக இருந்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் ஒரு முறை போதை தலைக்கேறி நடுரோட்டில் சண்டை போட்டதாகவும் கூறியுள்ளார். அத்துடன் மனோபாலா கொரோனா ஊசி செலுத்திய பின் குடித்ததால் தான் இறந்தார் என கூறி சர்ச்சை கிளப்பியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அவர் மீது காதல் வர இது தான் காரணம் - வெளிப்படையாக கூறிய ஆலியா!