Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உண்மையான ஹீரோ இதுதான் - விஜய் படத் தயாரிப்பாளர் டுவீட்

உண்மையான ஹீரோ இதுதான்  - விஜய் படத் தயாரிப்பாளர் டுவீட்
, புதன், 28 ஏப்ரல் 2021 (21:44 IST)
இளைஞர்களுக்கு இந்தக் கொரொனா காலத்தில் உண்மையான ஹீரோ இதுதான் என விஜய் படத் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பைத் தடுக்கும் வகையில் தற்போது 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் மே 1 முதல் இந்தியா முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது அமைச்சர்கள், அரசியல்தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் நடித்த பிகில் படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கொரோனாவுக்கு எதிரான ஹீரோ தடுப்பூசி என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

நாம் நாடு பெருந்தொற்றுப் பரவலால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளாது.  அதிக மக்கள் கொரோனா தொற்றுக்கு எதிராகத்தடுப்பூசியைப் பயன்படுத்தி வருகின்றனர்.  இந்த தடுப்பூசி வைரசிற்கு எதிராக நம்மை பாதுக்காக்கிற்து. நம் குடும்பத்தையும் பாதுகாக்கிறது.  நீங்கள் 18 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்சார் ஆனது ‘தள்ளி போகாதே’: ஆனால் ஓடிடியில் தான் ரிலீஸா?