Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலம் வந்தால் சினிமாவில் மட்டுமில்லை அரசியலிலும் மாற்றம் வரும்; ரஜினிகாந்த் பேச்சு

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2017 (12:04 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 26-ஆம் தேதியில் இருந்து ரசிகர்களை சந்தித்து வரும் நிலையில் அவர் தனது அரசியல் நிலைப்பாட்டை வரும் 31ஆம் தேதி அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் இறுதியில் ரஜினி அரசியலுக்கு வருவது தொடா்பான முக்கிய முடிவுகளை அறிவிக்கலாம் என்று அனைவரும்  எதிர்பார்த்துள்ளனர். இன்று 4 ஆம் நாளாக கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் வேலூர் மாவட்ட ரசிகர்களை சந்தித்தார். அப்போது பேசிய ரஜினிகாந்த்,“சினிமாவாக இருந்தாலும் சரி, அரசியலாக இருந்தாலும் சரி காலம் மிக முக்கியம். காலம்  வரும்போது எல்லாம் தானாக மாறும்.” என்று தெரிவித்துள்ளார். மேலும் “ஒருவன் வாழும் வாழ்க்கையை வைத்தே மக்கள் அவனை மதிப்பார்கள். ஒருமுறை கோவையில் ரசிகர்களின் ஆதரவைப் பார்த்து சிவாஜி இது உன்னுடைய காலம் என்று  என்னை வாழ்த்தினார். “ஆன்மிகத்தைக் கற்றுக்கொடு, மதத்தைக் கற்றுத்தராதே என்று குருநாதர் சச்சிதானந்தர் கூறியதாகவும், குடும்பம், தாய், தந்தை, பசங்களை பார்த்துக் கொண்டு மதிக்கத்தக்கவர்களாக வாழ வேண்டும் என்று தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
 
இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் ரசிகர்களுடன் புகைப்படன் எடுத்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மணிரத்னம் அடுத்த படம் ரொமான்ஸ் கதை.. ஹீரோ யார் தெரியுமா?

விஷால் - விஜய்சேதுபதி திடீர் சந்திப்பு.. நெகிழ்ச்சியான இன்ஸ்டாகிராம் பதிவு..!

நீ ஜெயிப்பாயா, நான் ஜெயிப்பேனா?”.. கமல் - சிம்பு மோதும் ‘தக்லைஃப்’ டிரைலர்..!

ஹோம்லி க்யூன் துஷாரா விஜயனின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

பிரேமம் நாயகி மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments