Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலம் வந்தால் சினிமாவில் மட்டுமில்லை அரசியலிலும் மாற்றம் வரும்; ரஜினிகாந்த் பேச்சு

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2017 (12:04 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 26-ஆம் தேதியில் இருந்து ரசிகர்களை சந்தித்து வரும் நிலையில் அவர் தனது அரசியல் நிலைப்பாட்டை வரும் 31ஆம் தேதி அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் இறுதியில் ரஜினி அரசியலுக்கு வருவது தொடா்பான முக்கிய முடிவுகளை அறிவிக்கலாம் என்று அனைவரும்  எதிர்பார்த்துள்ளனர். இன்று 4 ஆம் நாளாக கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் வேலூர் மாவட்ட ரசிகர்களை சந்தித்தார். அப்போது பேசிய ரஜினிகாந்த்,“சினிமாவாக இருந்தாலும் சரி, அரசியலாக இருந்தாலும் சரி காலம் மிக முக்கியம். காலம்  வரும்போது எல்லாம் தானாக மாறும்.” என்று தெரிவித்துள்ளார். மேலும் “ஒருவன் வாழும் வாழ்க்கையை வைத்தே மக்கள் அவனை மதிப்பார்கள். ஒருமுறை கோவையில் ரசிகர்களின் ஆதரவைப் பார்த்து சிவாஜி இது உன்னுடைய காலம் என்று  என்னை வாழ்த்தினார். “ஆன்மிகத்தைக் கற்றுக்கொடு, மதத்தைக் கற்றுத்தராதே என்று குருநாதர் சச்சிதானந்தர் கூறியதாகவும், குடும்பம், தாய், தந்தை, பசங்களை பார்த்துக் கொண்டு மதிக்கத்தக்கவர்களாக வாழ வேண்டும் என்று தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
 
இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் ரசிகர்களுடன் புகைப்படன் எடுத்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் அடுத்த படத்தை இயக்குவது தனுஷா? கார்த்திக் சுப்புராஜா? பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் யூடியூபர்கள்..!

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சிவகார்த்திகேயனை இயக்கும் படம் எப்போது தொடங்கும்?... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த ‘பாண்ட் கேர்ள்’ சிட்னி ஸ்வீனியா?... ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments