Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெய் நடித்த முதல் திகில் படம் எதுனு தெரியுமா?

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2017 (11:29 IST)
ஜெய் நடித்த முதல் திகில் படம், இன்று வெளியாகியுள்ள ‘பலூன்’ படம்தான்.
சினிஷ் இயக்கத்தில், ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பலூன்’. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படம், இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியிருக்கிறது.
 
இந்தப் படம் குறித்து ஜெய், “பலூன் தான் எனது முதல் திகில் படம். இதற்கு முன்பு நிறைய திகில் படங்களில் நடிக்க எனக்கு   வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவை சுவாரஸ்யமானதாக இல்லாததால் மறுத்துவிட்டேன். இந்த 'பலூன்' பட கதையை  இயக்குனர் சினிஷ் என்னிடம் சொன்னபொழுது அது என்னை மிகவும் ஈர்த்தது. ஒரு கதாபாத்திரத்தில் அசிஸ்டன்ட்  இயக்குனராகவும் , பிளாஷ்பேக் பகுதியில் பலூன் விற்கும் நபராகவும் நடித்துள்ளேன்.
 
இப்படத்தில் எனது கிளவுன் வேடம் நிச்சயம் ரசிக்கப்படும் என  நம்புகிறேன். இந்த படத்தை யுவனின் இசை அடுத்த தளத்திற்கு கொண்டுபோயுள்ளது என்பதே உண்மை. இது ஒரு திகில் படமாக  மட்டும் இல்லாமல், காதல், காமெடி என அனைத்து அம்சங்களும் அழகான கலவையில் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படம் எனது சினிமா வாழ்வில் ஒரு முக்கியமான படமாக  நிச்சயம் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை ரம்யா குறித்து இன்ஸ்டாவில் ஆபாச கருத்து: 48 பேர் மீது வழக்கு.. 3 பேர் கைது..!

தெலுங்குக்கு ராஜமௌலி… தமிழுக்கு லோகேஷ்…. ரஜினிகாந்த் பாராட்டு!

பார்ட் 2 படங்கள் நடிப்பதில் பயம்… ஆனா அந்த படம் மட்டும் நடிக்க ஆசை- சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!

பிராம்குமார் & விக்ரம் கூட்டணியில் உருவாகும் படத்தில் கதாநாயகி ஆகும் ருக்மிணி வசந்த்!

இனி சனிக்கிழமை எதிர்நீச்சல் 2 ஒளிபரப்பாகாது.. சன் டிவி அறிவிப்பால் ரசிகர்கள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments