Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனி ஒருவன் வெளியாகி 3 வருடம் நிறைவு! இன்று முக்கிய அறிவிப்பு

Advertiesment
தனி ஒருவன் வெளியாகி 3 வருடம் நிறைவு! இன்று முக்கிய அறிவிப்பு
, செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (12:24 IST)
'தனி ஒருவன்' படம் வெளியாகி 3 வருடங்கள் ஆனநிலையில் இந்த படத்தின் 2-ம் பாகம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

'ஜெயம்' படம் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமான ராஜா தொடர்ச்சியாக ரீமேக் படங்களையே இயக்கி, ரீமேக் ராஜா என்ற பெயரை பெற்றார்.

இந்நிலையில் எழுத்தாளர்கள் சுபாவுடன் இணைந்து இவர் எழுதிய இயக்கிய படம் தான் 'தனி ஒருவன்'.  இந்த படத்துக்கு   ஹிப் ஹிப் ஆதி இசையமைத்தார்.

இந்த படத்துக்கு ஹீரோவான ஜெயம் ரவி செய்த மித்ரன் கதாபாத்திரத்தை விட, அரவிந்த் சுவாமி செய்த சித்தார்த் அபிமன்யூ கதாபாத்திரமே ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

மேலும் ஒரு சிறப்பாக தமிழில் பிலிமில் படமாக்கப்பட்ட கடைசி படம் என்ற பெருமையை தனி ஒருவன்  பெற்றது. இந்த படத்துக்கு ராம்ஜியின் ஒளிப்பதிவு மிகப்பெரிய பலமாக அமைந்தது.

இந்நிலையில் இந்த படம் வெளியாகி இன்றுடன் 3 வருடங்கள் ஆகிறது. இன்று இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மஹத் செயலால் அதிர்ச்சியான ரசிகர்கள்