Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனி ஒருவன் 2 எப்போது தொடக்கம்… ஜெயம் ரவியோடு பேச்சுவார்த்தை நடத்திய தயாரிப்பு நிறுவனம்!

Advertiesment
தனி ஒருவன் 2 எப்போது தொடக்கம்… ஜெயம் ரவியோடு பேச்சுவார்த்தை நடத்திய தயாரிப்பு நிறுவனம்!

vinoth

, புதன், 15 மே 2024 (14:17 IST)
2015 ஆம் ஆண்டு வெளியான தனி ஒருவன் திரைப்படம் ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் முக்கியமானதொரு படமாக அமைந்தது. தொடர்ந்து ரீமேக் படங்களாக இயக்கி வந்த ஜெயம் ராஜாவின் முதல் சொந்தக் கதை இந்த திரைப்படம்.

இந்த படத்தில் ஜெயம் ரவியின் கதாபாத்திரத்துக்கு இணையாக வில்லனாக நடித்த அரவிந்த் சாமியின் கதாபாத்திரமும் வெற்றி பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் இரண்டாம் பாகத்துக்கான அறிவிப்பு வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. முதல் பாகத்தில் நடித்த ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர். இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் யார் வில்லனாக நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் இந்த படத்தின் பூஜை எளிமையாக நடந்தது. இதில் படத்தின் நாயகன் ஜெயம் ரவி கலந்துகொள்ளவில்லை. ஆனால் படம் எப்போது தொடங்கும் என்பது குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்போது தனி ஒருவன் 2 படம் குறித்து ஜெயம் ரவியோடு தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. எப்படியும் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கிவிட வேண்டுமென்ற இலக்கோடு செயல்பட்டு வருவதாக தெரிகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இறுதிக் கட்டத்தில் சிவகார்த்திகேயனின் அமரன் ஷூட்டிங்!