Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏன் பா ரஞ்சித்தின் தங்கலான் இன்னும் ஓடிடியில் ரிலீஸாகவில்லை…?

vinoth
வெள்ளி, 4 அக்டோபர் 2024 (15:29 IST)
பா ரஞ்சித் இயக்கத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த ‘தங்கலான்’ படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் முதல் நாளில் தமிழ் நாட்டில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் ஆதரவு கிடைத்தது. ஆனால் அதே நாளில் வெளியான டிமாண்டி காலணி படமும் சூப்பர் ஹிட் ஆனதால் தங்கலான் வசூல் இரண்டாவது வாரத்தில் குறைந்ததாக சொல்லப்படுகிறது.

ஆனாலும் விமர்சன ரீதியாக படம் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களும் பாராட்டிவருகின்றனர். ஆனாலும் படத்தின் இரண்டாம் பாதி தெளிவற்றதாக இருந்ததாக சில குறைகளும் சொல்லப்பட்டன. இதனால் படம் தமிழில் மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை.

இந்நிலையில் செப்டம்பர் 20 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்த படம் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் அந்த தேதியில் படம் ரிலீஸாகவில்லை. படம் திரையரங்கில் ரிலீஸாகி இரண்டு மாதங்கள் ஆகவுள்ள நிலையில் இன்னும் ஓடிடியில் வெளியாகாமல் இருப்பது ஏன் என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏன் பா ரஞ்சித்தின் தங்கலான் இன்னும் ஓடிடியில் ரிலீஸாகவில்லை…?

முதல் கட்ட ஷூட்டிங்கை நிறைவு செய்த் தனுஷின் ‘இட்லி கடை’ படக்குழு!

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு யோகிபாபு நன்றி: என்ன காரணம்?

ரஜினியுடன் பேசினேன்.. அவர் சக்தியை செலவழிக்க விரும்பவில்லை: வைரமுத்து

எளிமையாக நடந்து முடிந்த விஜய்யின் அடுத்த பட பூஜை!

அடுத்த கட்டுரையில்
Show comments