Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தலைவி ஜெயலலிதா பயோபிக்கே இல்லையாம்… அதிரடியாய் அறிவித்த படக்குழு!

தலைவி ஜெயலலிதா பயோபிக்கே இல்லையாம்… அதிரடியாய் அறிவித்த படக்குழு!
, திங்கள், 15 பிப்ரவரி 2021 (16:57 IST)
தலைவி படத்துக்கு தடையில்லா சான்று பெறவேண்டும் என தீபா வழக்கு தொடர்ந்த நிலையில் இப்போது அந்த திரைப்படம் ஜெயலலிதாவின் முழுமையான வாழ்க்கை வரலாறு இல்லை எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் தடைபட்டிருந்த நிலையில் இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் படத்தின் ரிலிஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு தடைகோரி ஜெயலலிதாவின் வாரிசாக நியமிக்கப்பட்டுள்ள தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்நிலையில் படக்குழுவினர் தலைவி திரைப்படம் முழுமையான ஜெயலலிதாவின் வாழக்கை வரலாறு இல்லை என்றும் எழுத்தாளரும் இயக்குனருமான அஜயன் பாலா எழுதிய ஒரு நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் திரைப்படம் என்றும் கூறி அந்த நாவலையும் சமர்ப்பித்துள்ளனராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் ஷங்கருடன் இணைந்த இசையமைப்பாளர்…. ரஹ்மான் ரசிகர்கள் சோகம்!