Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நடிகை டாப்ஸி! – முதல் படம் என்ன?

தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நடிகை டாப்ஸி! – முதல் படம் என்ன?
, வியாழன், 15 ஜூலை 2021 (13:33 IST)
பிரபல நடிகை டாப்ஸி படங்களில் நடிப்பதை தாண்டி சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

தெலுங்கு நடிகையான டாப்ஸி “ஆடுகளம்” மூலமாக தமிழில் அறிமுகமானார். பின்னர் பல மொழி படங்களில் நடித்து வந்த அவர் தற்போது இந்தி சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த ஹசீன் தில்ருபா திரைப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தனது நண்பருடன் இணைந்து புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார் டாப்ஸி. இந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு “அவுட்சைடர்ஸ் பிலிம்ஸ்” என்று பெயர் வைத்துள்ள நிலையில் முதல் படமாக டாப்ஸி நடிக்கும் படமே தயாராகி வருகிறது. ”ப்ளர்” என்ற அந்த படத்தில் டாப்ஸி நாயகியாக நடிக்க அஜய் பாஹ்ல் படத்தை இயக்குகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருப்பு ட்ரான்ஸ்பிரன்ட் புடவையில் கவர்ச்சி.... கிக்கு ஏத்தும் கீர்த்தி சுரேஷ்!