Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் சீரியல் நடிகைகளுக்கு நடக்கும் அக்கிரமங்கள்! விளாசிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை!

Webdunia
சனி, 22 ஜூன் 2019 (14:21 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதையாக இந்த சீரியல் ஒளிபரப்பபட்டு வருகிறது. 


 
கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி துவங்கிய இந்த சீரியலில் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர் முல்லை ரோலில் நடிக்கும் சித்ரா. இந்த சீரியல் மூலம் சித்ரா இல்லத்தரசிகளை வெகுவாக கவர்ந்துள்ளார்.
 
இந்நிலையில் சமீபத்தில் வாரஇதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் சீரியல்களில் நடக்கும் அவலங்களை கூறியுள்ளார். அதாவது ,  " தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் பல சீரியல்களில் தமிழ் பெண்களுக்கு வாய்ப்புகள் கொடுக்காமல் கேரளா, கர்நாடகா என வேறு மாநில பெண்களுக்கு வாய்ப்பு கோபித்து கொடுக்கிறார்கள். காரணம் வெள்ளையாக இருக்கிறார்கள் என்பதற்காக மட்டுமே இது பல திறமைவாய்ந்த கலைஞர்களை மனரீதியாக பாதிக்கிறது என்று கூறிய அவர், 
 
"நான் ரொம்ப கலர் கிடையாது, டஸ்கி கலர்தான். ஆனா, இதுவும் அழகுதானே?! நம்ம ஆளுங்க ஏன் வெள்ளையா இருக்கிற பொண்ணுங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறாங்கனு தெரியல." என்று ஆக்ரோஷத்துடன் சித்ரா பேட்டியில் தெரிவித்துளளார்.

தொடர்புடைய செய்திகள்

ஆஸ்கர் நூலத்தில் இடம்பெறுகிறது ஹரிஷ் கல்யாண் திரைப்படம்.. நெகிழ்ச்சியான பதிவு..!

“என் வழியில் நான் உறுதியா நிற்க எம்ஜிஆர் - சிவாஜிக்கு கிடைத்த ரிசல்ட் தான் காரணம்” ; ‘சாமானியன்’ ராமராஜன்!

புதிய கதாபாத்திரங்களில் நடிக்க புதியவர்களோடு பணியாற்ற விரும்புகிறேன்-பாகுபலி சீரிஸில் பின்னணி குரல் கொடுத்த சரத் கெல்கர்!

‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து பிரபாஸின் சிறந்த நண்பன் மற்றும் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது!

என்னய்யா இதெல்லாம் எடுத்து வெச்சிருக்கீங்க.. வாழ்க்கை வரலாற்று படத்தில் ரேப் சீன்! – அதிர்ச்சியடைந்த டொனால்ட் ட்ரம்ப்!

அடுத்த கட்டுரையில்
Show comments