Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல் பட ஷூட்டிங்கை முடிக்காமலேயே பலியான இளம் இயக்குனர் – நடிகை வேதனை!

முதல் பட ஷூட்டிங்கை முடிக்காமலேயே பலியான இளம் இயக்குனர் – நடிகை வேதனை!
, புதன், 10 ஜூன் 2020 (17:03 IST)
தமிழ் சினிமாவில் உடுக்கை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருந்த இயக்குனர் பாலமித்ரன் பக்கவாதத்தால் பலியாகியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்ததில் இருந்து இந்தியாவில் பல சினிமாக் கலைஞர்கள் பலியாகி வருகின்றனர். இர்பான் கான், ரிஷி கபூர், சிரஞ்சீவி சார்ஜா மற்றும் தமிழ் பட இயக்குனர் அருண் பிரசாத் என பலரும் இறந்த நிலையில் தற்போது உடுக்கை என்ற படத்தை இயக்கி வந்த பாலமித்ரன் என்ற இயக்குனர் பலியாகியுள்ளார்.

இதுகுறித்து உடுக்கை படத்தின் கதாநாயகி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘என்னுடைய உடுக்கை பட இயக்குனர் இறந்த செய்தி கேட்டு உடைந்து போனேன். மிகவும் அன்பான மனிதர். எனது அஞ்சலியை அவரது குடும்பத்துக்கு தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார். பாலமித்ரன் பக்கவாதம் மற்றும் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அவர் இயக்கிய உடுக்கை படம் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்க்காக பேசிய ஜெ.அன்பழகன்: மலரும் நினைவுகள்!!