Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு வாரத்திற்கு முன் தற்கொலை செய்த சுசாந்தின் பெண் மேலாளர்: அதிர்ச்சி தகவல்

ஒரு வாரத்திற்கு முன் தற்கொலை செய்த சுசாந்தின் பெண் மேலாளர்: அதிர்ச்சி தகவல்
, ஞாயிறு, 14 ஜூன் 2020 (19:43 IST)
ஒரு வாரத்திற்கு முன் தற்கொலை செய்த சுசாந்தின் பெண் மேலாளர்
பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் திடீரென இன்று மாலை தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பாலிவுட் திரையுலகையே கதிகலங்க வைத்துள்ளது. 34 வயதான இளம் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் மன அழுத்தத்தால் தற்கொலை தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட செய்தியை இன்னும் யாராலும் ஜீரணிக்க முடியவில்லை 
 
இந்த நிலையில் சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொள்வதற்கு சரியாக ஒரு வாரத்துக்கு முன்பு அவருடைய முன்னாள் பெண் மேலாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தற்போது வெளிவந்துள்ளது 
 
மும்பை மும்பையைச் சேர்ந்த திஷா ஷலியன் என்ற இளம்பெண் சுஷாந்த் சிங் உட்பட பல பாலிவுட் பிரபலங்களுக்கு மேனேஜராக இருந்தார். இவருக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் ஆனதை அடுத்து இவர் மும்பையில் உள்ள ஒரு முக்கிய பகுதியில் 14-வது மாடியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தார் 
 
கடந்த 8ஆம் தேதி திடீரென 14-வது மாடியில் இருந்து கீழே குதித்து திஷா ஷலியன் தற்கொலை செய்துகொண்டார். சுஷாந்த்சிங் ராஜ்புத் அவர்களிடம் மேலாளராக இருந்த திஷா ஷலியன் தற்கொலை செய்து கொண்ட அடுத்த ஒரே வாரத்தில் சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு தற்கொலைக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? என்பது குறித்து போலீசார் தற்போது விசாரணை செய்து வருகின்றனர் 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் சுஷாந்த் சிங் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி