Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுஷாந்த் வழக்கு விசாரணை… சிறை செல்வாரா ரியா?

சுஷாந்த் வழக்கு விசாரணை… சிறை செல்வாரா ரியா?
, செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (10:16 IST)
சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட அவரது முன்னாள் காதலி ரியா சக்ரபோர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இந்த வழக்கு சிபிஐ கைக்கு மாற்றப்பட்டதையடுத்து நாளுக்கு நாள் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது சுஷாந்த் போதை மருந்துக்கு அடிமைக்கப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதாவது இவரது முன்னாள் காதலில் ரியா, சுஷாந்திற்கு தேநீரில் சில துளிகள் போதை மருந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் ரியா தரப்பு இதை முற்றிலுமாக மறுத்துள்ளது. ரியா ஒரு நாளும் போதை மருந்தை உட்கொள்வில்லை எனறும் ரத்த பரிசோதனைக்கும் அவர் தயார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து இப்போது ரியாவுக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் இருந்து சம்மன் விடுக்கப்பட்டு அவர் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டார். விசாரணையில் அவர் கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் அவர் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்தை ஆசைநாயகனாக்கிய திரைப்படம் …. வெள்ளி விழா கொண்டாடும் ஆசை!