Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுஷாந்த் சிங் தற்கொலை.... 13 லட்சம் ஃபாலோயர்ஸை இழந்த நடிகை

சுஷாந்த் சிங் தற்கொலை.... 13 லட்சம் ஃபாலோயர்ஸை இழந்த நடிகை
, சனி, 20 ஜூன் 2020 (22:48 IST)
கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் பாலிவுட்டில்  மட்டுமல்ல இந்தியாவையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் நெருங்கிய தோழியிடன் போலீஸார் 8 மணி நேரம் விசாரணை செய்துள்ளனர்.

வியாழக்கிழமை சுஷாந்தின் பிஆர். மேலாளர்  ராதிகா நிஹாலானி, முன்னாள் மேலாளர் ஸ்ருதி மோடி ஆகியோருடன் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர் போலீஸார்.

மேலும், சுஷாந்தின் நெருங்கிய தோழி ரியா சக்கரவர்த்தியை பந்த்ரா காவல்நிலையத்திற்கு அழைத்த  போலீஸார் சுமார் 10 மணிநேரம் விசாரித்துள்ளனர்.

முக்கியமாக பிரபல நடிகர் சல்மான் கான் கொடுத்த அழுத்தம் காரணமாக சுஷாந்த் தொடர்ச்சியாக படங்களில் இருந்து நீக்கப்பட்டதாகவும்; அதனால் சல்மான் கான், கரண் ஜோஹர், சஞ்சய் லீலா பண்சாலி, ஏக்தா கபூர் ஆகிய 8 பேர் சுஷாந்த்தை தற்கொலைக்குத் தூண்டியதாக ம்னுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கொண்டு தகவல்கள் வெளியாக வாய்புள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆலியா பட், சுஷாந்த் என்று கேள்வி எழுப்பினார். ஒரு துறையில் இருந்தும் கூட அவர் யார் என்று வேண்டுமென்றே கேள்வி கேட்ட ஆலியட் பட் மீது ரசிகர்கள்  வெறுப்புகளை வெளியிட்டனர். குறிப்பாக அவரைப் ஃபாலோ செய்பவர்கள் 13 லட்சம் இருந்த நிலையில் சிலர் அவரது ஃபாலோயரிலிருந்து விலகி வருகின்றனர்.
webdunia

மேலும்ம், சுஷாந்த் போலவே பாலிவுட்டின் தான் பாதிக்கப்பட்டதாக வீடியோக்களை வெளியிட்டு வரும்  கங்கனா ரெனாவ்த்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 50 லட்சம் ஃபாலோயர்கள் அதிகரித்துள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நவம்பரில் திருமணம் …புது பங்களா கனவு… அதற்குள் தற்கொலை..விசாரணையில் புதுத்தகவல் !