Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர்!

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (09:10 IST)
கீழடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை நடிகர் சிவக்குமார், சூர்யா மற்றும் ஜோதிகா குடும்பத்தினர் இன்று பார்வையிட்டனர். 
 
கீழடியில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு நடைபெற்றது. இதில் சேகரிக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட அருங்காட்சியகம் ஒன்று உருவாக்கப்பட்டது. உலகதரத்தில் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம்  கடந்த மார்ச் மாதம் ஆறாம் தேதி அன்று பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. 
 
இந்நிலையில் தமிழ் மற்றும் தமிழர்களின் தொல்லியல் வரலாற்றை பறைசாற்றும் இந்த அருங்காட்சியகத்தை தமிழ் மொழிக்கு இலக்கிய சேவையை இடையறாது செய்து வரும் நடிகர் சிவக்குமார், அவரது மனைவி லட்சுமி சிவக்குமார், நடிகர் சூர்யா, திருமதி ஜோதிகா சூர்யா, அவர்களின் வாரிசுகளான தேவ் மற்றும் தியா ஆகியோர்களும் பார்வையிட்டனர்.
இவர்களுடன் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினரான சு. வெங்கடேசனும்  உடனிருந்தார். இறுதியில் அங்குள்ள பதிவேட்டில் சிவக்குமார் குடும்பத்தினர் தங்களது எண்ணங்களை குறிப்பிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரதீப் ரங்கநாதனின் லைக்' Vs 'டூட்' இரண்டுமே தீபாவளி ரிலீஸா? விட்டு கொடுக்க மறுக்கும் தயாரிப்பாளர்கள்..!

சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 பாடகர் சரணுக்கு, இளையராஜா டீசர்டை பரிசளித்த யுவன்சங்கர் ராஜா!!

மீண்டும் இணையும் சுந்தர் சி - விஷால் கூட்டணி: இசையமைப்பாளர் இந்த பிரபலமா?

பவன் கல்யாண் 'ஓஜி' படத்திலிருந்து சிம்பு பாடிய பாடல்கள் நீக்கமா? காரணம் என்ன?

காஜல் அகர்வாலின் கார்ஜியஸ் கிளிக்ஸ்… இன்ஸ்டா வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments