Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா பட நடிகையின் ’மிஸ் சவுத் அழகி பட்டம் ’ பறிமுதல்..

Webdunia
சனி, 1 ஜூன் 2019 (16:03 IST)
தமிழ் சினிமா ரசிகர்களால் பார்த்தவுடன் அடையாளம் கண்டுகொள்ள கூடிய அளவிற்கு நடித்து கதாநாயகி அந்தஸ்தை பெற்றவர் நடிகை மீரா மிதுன். இவர் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடிப்பதற்கு முன்பே மிஸ் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு, மிஸ் கியூன் ஆப் சவுத் இந்தியா ஆகிய பட்டங்களை வென்றுள்ளார். மேலும் மிஸ் தமிழ்நாடு என்ற நிறுவனத்தில் மண்டல இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நடிகை மீரா மிதுன், தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும் அதற்காக பாதுகாப்பு அளிக்கக் கோரியும்  சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன் புகார் மனு அளித்தார்.
 
அதில் அவர் கூறியுள்ளதாவது “மே 3-ம் தேதி மிஸ் தமிழ்நாடு டீவா 2019 என்ற நிகழ்ச்சியை நடத்தப் போவதாக அறிவித்தேன். இதனை தடுக்கும் நோக்கத்தில் அஜீத் ரவி, ஜோ மைக்கேல் பிரவீன், மலர்கொடி ஆகியோர் எனக்கு எதிராக  செயல்பட்டு வருகிறார்கள். 
மேலும்  சமூகவலைதளங்களில் என்னை பற்றி தவறான வதந்திகளை பரப்பி சில காவல்துறை அதிகாரிகளை வைத்தும் மிரட்டி வருகின்றனர்.அதற்கான ஆதாரமும் என்னிடம் உள்ளது .
 
அதுமட்டுமின்றி வரும் 3-ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் இந்த அழகிப் போட்டியில் கலந்துகொள்ளும் 14 பெண்களையும் போட்டியில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். எனவே சம்மந்தப்பட்டவர்கள் மீது காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் கூறியிரிந்தார்.
 
இந்நிலையில் இன்று மிஸ் சவுத் இந்திய பட்டத்தை மீரா மிதுன் தவறாகப் பயன்படுத்துவதாக வந்த புகாரை ஒட்டி  மிஸ் சவுத் இந்தியா  பட்டத்தை அவரிடமிருந்து திரும்பப் பெறுவதாக மிஸ் சவுத் இந்தியா  அமைப்பு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments