Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெய்பீம்க்கு ஆதரவாக நிற்கும் அனைவருக்கும் நன்றி – நடிகர் சூர்யா ட்வீட்!

ஜெய்பீம்க்கு ஆதரவாக நிற்கும் அனைவருக்கும் நன்றி – நடிகர் சூர்யா ட்வீட்!
, புதன், 17 நவம்பர் 2021 (16:52 IST)
ஜெய்பீம் திரைப்படம் சர்ச்சை விவகாரத்தில் ஆதரவாக நின்ற அனைவருக்கும் நன்றி என சூர்யா தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா நடித்து த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான படம் ஜெய்பீம். இருளர் பழங்குடி மக்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் பலரது பாராட்டுகளை பெற்றது.

அதேசமயம் இந்த படத்தின் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்துள்ளதாக பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து சூர்யாவுக்கு ஆதரவாகவும் பலர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் சூர்யா “ஜெய்பீம் திரைப்படத்தின் மீது நீங்கள் அளிக்கும் அன்பு அபிரிமிதமானது. இதற்கு முன்பு இதுபோன்று நான் பார்த்தது இல்லை. நன்றியை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. ஆதரவாக நிற்கும் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மறைந்த புனித் ராஜ்குமார் வீட்டிற்கு சென்ற நடிகர் விஷால்!