Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாடிவாசல் பற்றி பரவும் வதந்தி… கூலாக அடுத்த படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்கிய சூர்யா!

Advertiesment
Surya

vinoth

, செவ்வாய், 10 ஜூன் 2025 (08:04 IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளட்ட பலர் நடிக்க பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1 ஆம் தேதி ரிலீஸான வெற்றியைப் பெற்றது.

இதையடுத்து சூர்யாவின் அடுத்த படத்தின் பூஜை கடந்த மே 27 ஆம் தேதி ஐதராபாத்தில் நடந்தது. குறுகிய கால படமாக உருவாகவுள்ள இந்த படத்தை வெங்கட் அட்லூரி இயக்குகிறார். இவர் வாத்தி மற்றும் லக்கி பாஸ்கர் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இதற்கிடையில் சூர்யா நடிக்க இருந்த பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘வாடிவாசல்’ திரைப்படம் கைவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அது பற்றி கவலைப்படாமல் சூர்யா தன்னுடைய 46 ஆவது படத்தின் ஷூட்டிங்கை ஐதராபாத்தில் தொடங்கியுள்ளார். நேற்று இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குபேரா படத்தின் நீளம் இவ்வளவா?... ரசிகர்களைக் கட்டிப்போடுமா?... ரன்னிங் டைம் தகவல்!