Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அட்வான்ஸ் பணத்தை கேட்க வேண்டாம்: சூர்யாவின் பெருந்தன்மையால் ஹரி இன்ப அதிர்ச்சி

அட்வான்ஸ் பணத்தை கேட்க வேண்டாம்: சூர்யாவின் பெருந்தன்மையால் ஹரி இன்ப அதிர்ச்சி
, திங்கள், 21 செப்டம்பர் 2020 (18:04 IST)
பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்ததாக கூறப்பட்ட ’அருவா’ திரைப்படம் திடீரென டிராப் ஆனது என்பது தெரிந்ததே. இந்தப் படத்தின் இடைவேளைக்குப் பிந்தைய கதை தனக்கு திருப்தி இல்லாததால் அந்த கதையை மாற்றுமாறு சூர்யா கூறியதாகவும் ஆனால் ஹரி அடுத்தடுத்து கூறிய கதைகளும் சூர்யாவுக்கு பிடித்ததால் ஒரு கட்டத்தில் கடுப்பான ஹரி தான் இந்த படத்தில் இருந்து விலகிக்கொள்வதாக கூறிவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது 
 
இந்த நிலையில் ‘அருவா’ திரைப்படம் கமிட்டான போதே சூர்யா தரப்பிலிருந்து இயக்குனருக்கு ரூ1 கோடி அட்வான்ஸ் பணம் கொடுத்ததாகவும் இந்த நிலையில் தற்போது அட்வான்ஸ் பணத்தை கேட்க வேண்டாம் என்று சூர்யா தன் மேனேஜரிடம் கூறியதாகவும் தெரிகிறது 
 
ஹரியின் இயக்கத்தில் தான் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியது என்றும், அவரால்தான் தான் இந்த நிலைக்கு வந்து இருப்பதாகவும் அந்த நன்றிக் கடனாக அந்த பணத்தை கேட்க வேண்டாம் என்றும் அவராகவே கொடுத்தால் பெற்றுக் கொள்ளலாம் என்று சூர்யா தனது மேனேஜரிடம் கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
 
இது குறித்து தகவல் அறிந்த உடன் ஹரி இன்ப அதிர்ச்சி அடைந்ததாகவும் சூர்யாவுக்கு ஏற்ற கதையை நிச்சயம் எழுதி அவரை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்குவேன் என்று மனதளவில் சூளுரை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’பிசாசு 2’ படத்தின் பட்ஜெட் எவ்வளவு? ஆச்சரிய தகவல்