Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தின் தெலுங்கு உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

Advertiesment
சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தின் தெலுங்கு உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

vinoth

, சனி, 1 மார்ச் 2025 (10:39 IST)
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரெட்ரோ’ எனும் திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா - சூர்யா ஆகியோருடன் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. படம் மே 1 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமையை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த நிறுவனம்தான் சூர்யாவின் அடுத்த படத்தைத் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தை லக்கி பாஸ்கர் புகழ் வெங்கட் அட்லூரி இயக்குவார் என்றும் சொல்லப்படுகிறது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாடிவாசல் எப்பதான் தொடங்கும்?... ஒரு வழியாக அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்!