Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா இல்லாமல் தொடங்கும் பாண்டிராஜ் படத்தின் படப்பிடிப்பு!

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (16:59 IST)
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் பூஜையோடு தொடங்கியுள்ளது.

சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளது உறுதியாகிவிட்டது.. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைக்க உள்ளர். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாம். படத்துக்கான மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க முக்கியமானக் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் முதல் முறையாக சரத்குமார் இந்த படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடிக்க உள்ளாராம். அதுமட்டுமில்லாமல் நீண்ட நாட்களாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் நடிகர் வடிவேலு இந்த படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு தொடங்கியது.

கொரோனா காரணமாக ஓய்வில் இருக்கும் சூர்யா பூஜையில் கலந்துகொள்ளவில்லை. இப்போது சூர்யா இல்லாத காட்சிகளை இயக்குனர் பாண்டிராஜ் படமாக்க உள்ளாராம். பின்னர் புதுக்கோட்டையில் நடக்கும் படப்பிடிப்பில்தான் சூர்யா கலந்துகொள்ள உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments