Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனுஷை தொடர்ந்து சூர்யா? மாரி செல்வராஜ் அடுத்த பளான் !

தனுஷை தொடர்ந்து சூர்யா? மாரி செல்வராஜ் அடுத்த பளான் !
, சனி, 10 ஏப்ரல் 2021 (12:17 IST)
சூர்யா, மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் அந்தப் படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 
சூர்யாவின் 40 ஆவது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைக்க உள்ளர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க முக்கியமானக் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளார். 
 
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூர்யா மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் அந்தப் படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பரியேறும் பெருமாள் படத்தை இயக்கியதின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கர்ணன்’படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாண்டிசேரியில் கிளாமராக சுற்றித்திரியும் ஷாலு ஷம்மு - ரீசன்ட் போட்டோஸ்!