Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாண்டிச்சேரியில் பட்டாளம் போட்ட சூர்யா 37 குழு !

பாண்டிச்சேரியில் பட்டாளம் போட்ட சூர்யா 37 குழு !
, செவ்வாய், 27 நவம்பர் 2018 (11:56 IST)
சூர்யா 37 படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் துவக்கம்.
விக்னேஷ் சிவன் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் படத்திற்குப் பிறகு செல்வராகவனின் ‘NGK’ மற்றும் கே.வி.ஆனந்தின் பெயரிடப் படாத படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார் சூர்யா. கே.வி.ஆனந்த் இயக்கும் இந்தப் படத்தை சூர்யா 37 என்ற படம் தற்போது விறு விறுப்பாக உருவாக்கப்படுகிறது. 
 
இதில் ஹீரோயினாக சாயிஷா நடிக்கிறார். இவர்களுடன் மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மோகன் லால், தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ், பாலிவுட் நடிகர் பொம்மன் இரானி, ஆர்யா, இயக்குநர் சமுத்திரக்கனி என முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். 
 
இந்த படத்தில் நடிகர் சூர்யா மிலிட்டரி கட் கொண்ட கெட்டப்பில் வருவது போன்ற இப்படத்தின் பிரத்தியேக புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வலம் வருகிறது.    
 
ஏற்கனேவே சூர்யாவை வைத்து அயன், மாற்றான் என சிறந்த படங்களை தந்தவர் இப்படத்திலும் சூர்யாவின் பாத்திரத்தை ரசிகர்கள் கொண்டாடும்படி வடிவமைத்திருப்பார் என்று எதிர்பார்க்கலாம்.     
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள செய்தி என்னவென்றால் , இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் துவங்குகிறது.    

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல நட்சத்திரத்தின் எதிர்பாராத சந்திப்பு - இன்ப அதிர்ச்சியில் சிம்பு!