Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லாத்துக்கும் காரணம் பாலா அண்ணன்தான்… வணங்கான் மேடையில் சூர்யா நெகிழ்ச்சி!

vinoth
வியாழன், 19 டிசம்பர் 2024 (08:00 IST)
இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான வணங்கான் திரைப்படம் கிடப்பில் போடப்பட்ட நிலையில் அதன் பிறகு அந்த படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்தார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில், ரோஷினி ஹர்ப்ரியன், சமுத்திரக்கனி மற்றும் மிஷ்கின் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த  படத்தை இயக்குனர் பாலா மற்றும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர். படம் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தற்போது ஜனவரி மாதம் 10 ஆம் தேதியே வணங்கான் படம் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாலா திரையுலகுக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அவருக்கான பாராட்டு விழா வணங்கான் படத்தின் ஆடியோ ரிலீஸோடு நடந்தது.

அதில் கலந்துகொண்டு பேசிய சூர்யா “ சேது படம் எனக்குள் 100 நாட்கள் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2000 ஆம் ஆண்டு நான் ஷூட்டிங்கில் இருந்தபோது எனக்கு ஒரு போன் கால் வந்தது. அதில் என்னுடைய அடுத்த படத்தில் நீதான் ஹீரோ என்று பாலா அண்ணன் சொன்னார். அந்த ஒரு வார்த்தை எல்லாவற்றையும் மாற்றியது. அதன் பிறகுதான் கௌதம் காக்க காக்க படத்திற்குக் கூப்பிட்டார். அதைப் பார்த்துவிட்டுதான் என் சஞ்சய் ராமசாமி இவர்தான் என முருகதாஸ் கூப்பிட்டார். இதற்கெல்லாம் காரணம் பாலா அண்ணன்தான்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

குபேரா படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நாகார்ஜுனா!

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments