Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தொடங்கிய சூர்யா 44 பட ஷூட்டிங்!

vinoth
சனி, 27 ஜூலை 2024 (15:51 IST)
சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது. படத்துக்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஒளிப்பதிவாளராக ஸ்ரேயாஸ் கிருஷ்ணா படத்தொகுப்பாளராக ஷஃபீக் முகமது அலியும், ஸ்டண்ட் இயக்குனராக கெச்சா காம்பக்தேயும், காஸ்ட்யூம் டிசைனராக ப்ரவீன் ராஜாவும் ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.

வில்லனாக உறியடி விஜயகுமார் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. மேலும் ஜோஜு ஜார்ஜ், நவீன் சந்திரா, டாணாக்காரன் தமிழ் மற்றும் நாராயணன் ஆகியோரும் நடிக்கின்றனர். கார்த்திக் சுப்பராஜின் மற்ற படங்களைப் போலவே இந்த படமும் ஒரு கேங்ஸ்டர் கதைதான் என்று சொல்லப்படுகிறது. மேலும் இது ஒரு பீரியட் படமாக உருவாகி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

சமீபத்தில் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் இப்போது படத்தின் ஷூட்டிங் மீண்டும் ஊட்டியில் தொடங்கியுள்ளது. அங்கு முக்கியமானக் காட்சிகளை படக்குழு படமாக்கி வருகிறது. அங்கு 20 நாட்கள் படப்பிடிப்பு நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெளியானது விஜயின் கடைசி படத்தின் அப்டேட்.! தீப்பந்தத்தை ஏந்தி நிற்கும் போஸ்டர்.!!

'தலைவெட்டியான் பாளையம்' எனும் இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு

நடிகை சாந்தி பாலச்சந்திரன் திரைக்கதை எழுதுவதிலும் தடம் பதிக்கிறார்!

நந்தன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் கிளாமர் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments