Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்தமான் ஷூட்டிங்கை முடித்துவிட்டு இந்தியா திரும்பியா ‘சூர்யா 44’ படக்குழு!

vinoth
சனி, 6 ஜூலை 2024 (07:07 IST)
சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது. படத்துக்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஒளிப்பதிவாளராக ஸ்ரேயாஸ் கிருஷ்ணா படத்தொகுப்பாளராக ஷஃபீக் முகமது அலியும், ஸ்டண்ட் இயக்குனராக கெச்சா காம்பக்தேயும், காஸ்ட்யூம் டிசைனராக ப்ரவீன் ராஜாவும் ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.

வில்லனாக உறியடி விஜயகுமார் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் ஜோஜு ஜார்ஜ், நவீன் சந்திரா, டாணாக்காரன் தமிழ் மற்றும் நாராயணன் ஆகியோரும் நடிக்கின்றனர். கார்த்திக் சுப்பராஜின் மற்ற படங்களைப் போலவே இந்த படமும் ஒரு கேங்ஸ்டர் கதைதான் என்று சொல்லப்படுகிறது. மேலும் இது ஒரு பீரியட் படமாக உருவாகி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

படத்தின் ஷூட்டிங் ஜூன் மாத தொடக்கத்தில் அந்தமானில் தொடங்கியது. அங்கு இடைவேளையே இல்லாமல் தொடர்ச்சியாக ஷூட்டிங் நடத்தப்பட்ட நிலையில் இப்போது அங்கு எடுக்கவேண்டிய காட்சிகளை படமாக்கிவிட்டு படக்குழு சென்னை திரும்பியுள்ளது. அடுத்த கட்ட ஷூட்டுக்காக படக்குழு விரைவில் ஊட்டிக்கு செல்ல இருப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

96 படத்தின் இரண்டாம் பாகம்… ஆர்வம் காட்டாத விஜய் சேதுபதி!

அடுத்த கட்டுரையில்
Show comments