Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங், இயக்குனர் பா ரஞ்சித் நெருங்கிய நண்பரா? அதிர்ச்சி தகவல்..!

Siva
வெள்ளி, 5 ஜூலை 2024 (22:25 IST)
சென்னையில் இன்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் அவர் பிரபல திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் நெருங்கிய நண்பர் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களை இன்று உணவு டெலிவரி செய்யும் நபர்கள் போல் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக ஆய்வாளால் வெட்டி உள்ளனர். 
 
இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவர் சிகிச்சையின் பலன் இன்றி உயிரிழந்தார். இதனை அடுத்து அவரது உடலை பார்க்க அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கட்சியினர் வந்ததால் மருத்துவமனை அருகே பெரும் பதட்ட நிலை ஏற்பட்டது. 
 
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அறிந்து பா. ரஞ்சித் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இருவரும் பல ஆண்டுகளாக நெருக்கமான நண்பர்கள் என்றும் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சியை அடைந்ததாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் அவர்களை கொலை செய்தவர்களை தேடுவதற்காக ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹேமா கமிஷனில் வாக்குமூலம் அளித்த 20 சாட்சிகள்.. சிக்கலில் திரையுலக பிரபலங்கள்..!

தனுஷின் 52வது படத்தின் டைட்டில் இதுதான்.. இசையமைப்பாளர் யார்?

நடிகைகள் குறித்து அவதூறுப் பேச்சு: மன்னிப்பு கோரினார் டாக்டர் காந்தராஜ்

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் துஷாராவின் ஸ்டைலிஷான போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments