Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூப்பர்ஸ்டார் படம் 3 நாள் ; பாகுபலி 10 நாள் : கஸ்தூரி ராஜா பேச்சு

சூப்பர்ஸ்டார் படம் 3 நாள் ; பாகுபலி 10 நாள் : கஸ்தூரி ராஜா பேச்சு
, திங்கள், 8 மே 2017 (16:15 IST)
தமிழ் சினிமா இயக்குனரும், நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி தெரிவித்துள்ள கருத்து பலரையும் கோபமடைய செய்துள்ளது.


 

 
முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள படம் துணிகரம். இந்த படத்தை பாலசுதன் என்பவர் தயாரித்து இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில், இயக்குனர் கஸ்தூரி ராஜா கலந்து கொண்டார். அந்த விழாவில் அவர் பேசியதாவது :
 
இந்த படத்திற்கு துணிகரம் என துணிச்சலாக பெயர் வைத்துள்ளனர். நான் சினிமாவில் படம் இயக்க வாய்ப்பு தேடி அலைந்த போதும், தனுஷை வைத்து துள்ளுவதோ இளமை படம் எடுக்கும் போதும் என்னை கோமாளியாகவே பார்த்தனர். 
 
தற்போது சினிமா மாறியிருக்கிறது. சூப்பர்ஸ்டார் படமும் 3 நாள்தான். உலகம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கும் பாகுபலி 10 நாள்தான். இதனால் நிறைய படங்கள் வருகிறது. இது ஆரோக்கியமான சூழ்நிலை” என அவர் பேசினார். 
 
சூப்பர்ஸ்டார் என அவர் குறிப்பிடுவது அவரின் சம்பந்தியுமான ரஜினியைத்தான். ரஜினி படங்கள் 3 நாட்கள்தான் ஓடுகிறதா?. அதேபோல், பாகுபலி வெளியாகி 10 நாட்கள் முடிந்த பின்னும் இன்னும் தியேட்டர்களில் கூட்டம் குறையவில்லை. இதுவரை அப்படம் ரூ.1000 கோடியை வசூலித்துள்ளது. இன்னும் பல நாட்களுக்கு அந்தப்படம் தியேட்டரை விட்டு போகாது என நம்பப்படுகிறது.
 
இந்நிலையில், அதற்கு மாறாக கஸ்தூரி ராஜா கருத்து தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜயை கடவுளாக்கி மாலை போட்ட ரசிகர்கள் - வைரல் வீடியோ