ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸின் 100 -வது படத்தை சுந்தர் சி. இயக்குகிறார். பிரமாண்டமாக தயாராகும் இந்த சரித்திரப் படத்துக்கு சங்கமித்ரா என பெயர் வைத்துள்ளனர். இதில் ஜெயம் ரவி நாயகனாக நடிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
சங்கமித்ராவின் பட்ஜெட் 250 கோடிகள் என கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் படம் தயாராகிறது. இதில் மகேஷ்பாபு நடிப்பார் என்றனர். பிறகு சூர்யா. அதன் பிறகு விஜய். இவர்கள் அனைவரும் சங்கமித்ராவில் நடிப்பதை மறுத்த நிலையில், ஜெயம் ரவியின் பெயர் அடிபடுகிறது.
இந்த மெகா பட்ஜெட் படத்துக்கு ரஹ்மான் இசையமைக்க, சாபு சிரில் கலை இயக்கத்தை கவனிக்கிறார். இந்த வருட இறுதிக்குள் படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
சங்கமித்ராவில் ஜெயம் ரவி நடிப்பதை இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் மறுக்கவோ உறுதி செய்யவோ இல்லை.