Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாலிவுட் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகும் சுந்தர் சி… ஹீரோ யார் தெரியுமா?

பாலிவுட் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகும் சுந்தர் சி… ஹீரோ யார் தெரியுமா?

vinoth

, செவ்வாய், 19 மார்ச் 2024 (14:58 IST)
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கமர்ஷியல் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் நகைச்சுவை பேய்ப் படங்களின் வரிசையைத் துவக்கிவைத்ததில் 2014ல் வெளிவந்த அரண்மனை படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்கு உண்டு. 2014ல் துவங்கிய அரண்மனை வரிசையின் மூன்று பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.

அதையடுத்து பேய் படங்களுக்கு கேப் விட்டு பீல்குட் படமாக காபி வித் காதல் திரைப்படத்தை இயக்கினார். அந்த படம் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. அதன் பின்னர் அவர் இப்போது மீண்டும் அரண்மனை நான்காம பாகத்தை உருவாக்கி வருகிறார்.

இந்நிலையில் சுந்தர் சி தனது அடுத்த படத்தை பாலிவுட்டில் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அக்‌ஷய் குமார் மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடிப்பில் ஒரு படத்தை இயக்க சுந்தர் சி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜப்பானில் ரிலீஸ் ஆகும் நோலனின் ஓப்பன்ஹெய்மர்… போஸ்டரில் நடந்த மாற்றம்!