Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

25 வருடம் கழித்து படம் இயக்கிய சுஹாசினி

25 வருடம் கழித்து படம் இயக்கிய சுஹாசினி
, செவ்வாய், 21 ஜூலை 2020 (20:19 IST)
25 வருடம் கழித்து படம் இயக்கிய சுஹாசினி
பிரபல இயக்குநர் மணிரத்னம் மனைவியும் நடிகையுமான சுஹாசினி ஏற்கனவே பெண் என்ற தொலைக்காட்சித் தொடர்களையும் 'இந்திரா' என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1995ஆம் ஆண்டு சுஹாசினி இயக்கிய இத்திரைப்படத்தில் அரவிந்த்சாமி மற்றும் சுகாசினியின் நெருங்கிய உறவினரான அனு ஹாசன் ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்திருந்தார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் 25 வருடங்கள் கழித்து மீண்டும் சுஹாசினி இயக்குனர் பதவியை கையில் எடுத்து உள்ளார். அவர் தற்போது ஒரு குறும்படம் தயாரித்து உள்ளதாகவும் 20 நிமிடங்கள் ஓடும் இந்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி விட்டதாகவும் விரைவில் ஓடிடி பிளாட்பாரத்தில் இந்த குறும்படம் வெளியாக உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது 
 
இந்த குறும்படத்திற்காக சுஹாசினி ஒரு புதிய இசையமைப்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளார். ரோஜா திரைப்படத்தில் மணிரத்னம் அவர்கள் ஏ.ஆர் ரஹ்மானை அறிமுகப்படுத்தியது போல் இந்த குறும்படத்தின் மூலம் அறிமுகமாகும் அந்த இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் உருவெடுப்பார் என்றும் சுஹாசினி நம்பிக்கை தெரிவித்துள்ளார் 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹன்சிகாவின் நான்கு நாட்களுக்காக சிம்பு வெயிட்டிங்