Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தில் ‘பாகுபலி 2’ ஸ்டண்ட் கலைஞர்.. ஆச்சரிய தகவல்..!

Siva
திங்கள், 17 மார்ச் 2025 (18:57 IST)
சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இ

இந்த நிலையில் இந்த படத்திற்கு ஸ்டண்ட் அமைத்தவர் கேச்சா என்றும், உலகளவில் பிரபலமான ஸ்டண்ட் கலைஞர்களில் ஒருவரான இவர் ‘Ong Bak 2’, ‘Baahubali 2’ உள்ளிட்ட பல சர்வதேசத் தரம் வாய்ந்த திரைப்படங்களில் பணியாற்றியவர் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

தாய்லாந்தைச் சேர்ந்த கேச்சா, சண்டைக் காட்சிகளை யதார்த்தமாகவும், பரபரப்பாகவும் வடிவமைப்பதில் சிறப்பு பெற்றவர். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவருடன் தொடர்ந்து வீடியோ காலில் இணைந்து, படத்திற்கேற்ப தேவைப்படும் சண்டைக் காட்சிகளை சிறப்பாக உருவாக்க பல்வேறு விவாதங்கள் மேற்கொண்டுள்ளார்.

இயக்குநரின் முக்கிய கோரிக்கை, ஒவ்வொரு சண்டைக் காட்சியும் தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதுதான். இதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்ட கேச்சா, படத்தின் கதைக்களம், உணர்வுப் பின்னணி ஆகியவற்றை நுணுக்கமாக புரிந்து கொண்டு, புதுமையான சண்டைக் காட்சிகளை உருவாக்கியுள்ளார்.

திரையரங்குகளில் இந்த சண்டைக் காட்சிகள் பார்வையாளர்களுக்கு ஒரு புதுவித அனுபவமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால், ‘ரெட்ரோ’ படத்தின் எதிர்பார்ப்பு  அதிகரித்துள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அழகுப் பதுமையாக மிளுரும் சம்யுக்தா மேனன்… கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

கருநிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய ஷிவானி…!

ரிலீஸ் வேலைகளைத் தொடங்கிய ‘வீர தீர சூரன்’ படக்குழு… டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மதராஸி படத்தின் ஓடிடி வியாபாரத்தால் அப்செட் ஆன சிவகார்த்திகேயன்.. பின்னணி என்ன?

மாஸ்டர்ஸ் லீக் போட்டியிலுமா சண்டை போடுவீங்க… யுவ்ராஜை முறைத்த மேற்கத்திய வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments