Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கதைத்திருட்டு விவகாரம்: விஜய் எடுத்த அதிரடி முடிவு

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2018 (22:18 IST)
விஜய் நடிக்கும் படம் என்றாலே ரிலீசின்போது பிரச்சனை ஏற்படுவது வழக்கம். ஆனால் அவை எல்லாமே விஜய்யை குறிவைத்து மட்டுமே இருக்கும். ஆனால் 'சர்கார்' படத்தின் கதைத்திருட்டு விவகாரத்தில் யாருமே விஜய்யை குறை சொல்லவில்லை. ஏ.ஆர்.முருகதாஸ் மீதே மொத்த விமர்சனமும் விழுந்து வருகிறது.

இந்த நிலையில் இனிமேல் கதை சொல்ல வருகிறேன் என்று யாராவது கேட்டால் அவர்களை உள்ளே நுழையவிட வேண்டாம் என்று விஜய் கூறிவிட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. பிரபல எழுத்தாளர்கள் எழுதிய கதை அல்லது வெற்றி பெற்ற பிற மொழி படங்களை இயக்குவதாக கூறுபவர்கள் மட்டுமே இனி விஜய்யை அணுக முடியும் என்று கூறப்படுகிறது.

விஜய்யின் இந்த முடிவை கோலிவுட்டில் பெரிய நடிகர்களும் பின்பற்ற முடிவு செய்துவிட்டார்களாம். மேலும் 'சர்கார்' படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் பெயர் கொஞ்சம் அதிகமாகவே டேமேஜ் ஆகிவிட்டதால் இனி மீண்டும் விஜய்-முருகதாஸ் கூட்டணி இருக்காது என்றே விபரம் அறிந்தவர்கள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆகஸ்ட்டில் தொடங்குகிறதா கமல் - அன்பறிவ் படப்பிடிப்பு.. வாய்ப்பே என சொல்லும் படக்குழு..!

ரஜினியின் ‘கூலி’ படத்தில் கமல் மகள் மட்டுமல்ல.. கமலும் இருக்கின்றாரா? ஆச்சரிய தகவல்..!

நான் விரும்பிப் பாடவில்லை… இயக்குனர்கள்தான் வற்புறுத்துகிறார்கள் –அனிருத் பகிர்ந்த சீக்ரெட்!

தனுஷுடன் நான் இணையும் படம் மைல்கல்லாக இருக்கும்… மாரி செல்வராஜ் நம்பிக்கை!

ப்ரதீப் ரங்கநாதனின் LIK ரிலீஸ் தாமதம்… காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments