Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொய்யான செய்திகளை பகிர்வதை நிறுத்துங்கள்- பிரபல நடிகை

பொய்யான செய்திகளை பகிர்வதை நிறுத்துங்கள்-  பிரபல நடிகை
, சனி, 8 ஜூலை 2023 (19:33 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை கீர்த்தி ஷெட்டி. இவர், இந்தியில் சூப்பர் 30 என்ற படத்திலும் தெலுங்கில் உப்பெனா என்ற படத்திலும் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன்பின்னர், ஷ்யாம் சிங்கா ராய், பங்கா ராஜூ, தி வாரியர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் கஸ்டரி படம் வெளியானது.  இதையடுத்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகவுள்ள ஜீனி படத்தில் ஹீரோயினாக நடிக்க மூன்று ஹீரோயின்களில் ஒருவராக  ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில், தெலுங்கில் முன்னணி ஹீரோ   ஒருவர் அவருக்கு பாலியல் தொல்லை தருவதாகவும், பட விழாக்களுக்கு அவரை  வர வைப்பதாகவும் இது தனக்குப் பிடிக்கவில்லை என கீர்த்தி ஷெட்டி கூறியதாக தகவல்கள் வெளியானது.

இந்த செய்தியைத் தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்துள்ள கீர்த்தி ஷெட்டி, ''இதுபோன்ற உண்மையில்லாத செய்திகளை பகிர்வதை நிறுத்துங்கள். இந்த செய்தி எல்லை மீறிப் போய்க் கொண்டிருப்பதால் இதைப் பற்றிப் பேசுகிறேன்''…என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லியோ பட முதல் சிங்கில் '' நா ரெடி தான்'' பாடலுக்கு சிக்கல்? வெளியாகும் தகவல்