Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபாஸ் பற்றி ‘சுவையான’ தகவல் சொன்ன ராஜமெளலி

Webdunia
திங்கள், 5 ஜூன் 2017 (13:16 IST)
பாகுபலி ஷூட்டிங் சமயத்தில் நடந்த ‘சுவையான’ தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி.



 

கோடிகளைக் குவித்த ‘பாகுபலி’ இயக்குநர் ராஜமெளலியுடன், பிரிட்டிஷ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், பிரபாஸ் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றைப் பகிர்ந்து கொண்டார் ராஜமெளலி.

கட்டுடலுக்காக தீவிர டயட்டில் இருந்த பிரபாஸ், மாதத்துக்கு ஒருமுறை மட்டும் டயட்டைத் தளர்த்தி பிடித்த உணவுகளைச் சாப்பிடுவார். அப்போது, பிரியாணியில் மட்டுமே 15 வகைகள் இடம்பெறுமாம். அத்துடன், சிக்கன், மட்டன், மீன் கிரேவி, வறுவல் என ஒரு முனியாண்டி விலாஸே அங்கு இருக்குமாம்.

அப்படித்தான் ஒருநாள் ஃபுட்பால் விளையாடிவிட்டு இரவு 2 மணிக்கு சாப்பிட உட்கார்ந்திருக்கிறார்கள். எல்லாவகை உணவுகளையும் ருசிபார்த்த பிரபாஸ், ‘சட்னி இல்லையா?’ என்று கேட்டிருக்கிறார். உடனே வீட்டுக்கு ஓடிப்போய் தன் மனைவியை எழுப்பி சட்னி அரைத்து எடுத்துக் கொண்டு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருக்கிறார் பிரபாஸின் மச்சான். தன் முன்னே அவ்வளவு உணவுகள் இருந்தும், சட்னிக்காக அர்த்த ராத்திரியில் அலம்பல் கொடுத்திருக்கிறார் பிரபாஸ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கண்கவர் உடையில் போட்டோஷுட் நடத்திய பிரியங்கா மோகன்… ரீசண்ட் க்ளிக்ஸ்!

கண்ணோடு மோதும் கண்ணாடிப்பூவே…பூஜா ஹெக்டேவின் அழகிய க்ளிக்ஸ்!

நான் யார் என்பதை மற்றவர்களின் கருத்துகள் வரையறுக்க அனுமதிக்க மாட்டேன் –அஜித்குமார் பேட்டி!

ரெய்டு நடக்கும் ஹோட்டல்கள் என்னுடையவை இல்லை… நடிகர் ஆர்யா மறுப்பு!

வார நாட்களிலும் கணிசமான வசூல்.. வெற்றியை நோக்கி செல்லும் படை தலைவன்!

அடுத்த கட்டுரையில்
Show comments