Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் போராட்டம் முடிவுக்கு வருகிறது…

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் போராட்டம் முடிவுக்கு வருகிறது…
, திங்கள், 23 ஏப்ரல் 2018 (17:14 IST)
சினிமாவில் பாலியல் சீண்டலுக்கு எதிராகப் போராடிவந்த ஸ்ரீரெட்டியின் போராட்டம் முடிவுக்கு வருகிறது. 

 
 
தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த ஸ்ரீரெட்டி, சினிமாவில் நடிகைகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். திடீரென ஒருநாள் தன் மேலாடையை அகற்றி, அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டார். அத்துடன், யார் யாரெல்லாம் படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்றும் ட்விட்டரில் ஒரு லிஸ்ட் வெளியிட்டார். இதனால், தெலுங்குத் திரையுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்தது.
webdunia
 
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரான பவன் கல்யாண், இந்தப் பிரச்னையை விரைந்து முடிக்குமாறு தெலுங்கு சினிமா சங்கங்களை கேட்டுக் கொண்டார். அதன்படி, அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில், பிலிம் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷனில், நடிகைகள் பாலியல் சீண்டலுக்கு ஆளானதை விசாரிப்பதற்காகத் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷின் ‘மாரி 2’ : இன்று முதல் ஷூட்டிங் தொடக்கம்