Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் யார்? ரூ.60 லட்சம் வீடு பெற்ற அதிர்ஷ்டசாலி சிறுமி..!

சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் யார்? ரூ.60 லட்சம் வீடு பெற்ற அதிர்ஷ்டசாலி சிறுமி..!
, திங்கள், 11 டிசம்பர் 2023 (06:58 IST)
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த நிலையில் இசையமைப்பாளர் தமன் டைட்டில் வின்னர் யார் என்பதை அறிவித்தார்.

கடந்த சில மாதங்களாக விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நடைபெற்று வந்த நிலையில் நேற்று இறுதிப்போட்டியில் நடைபெற்றது. இந்த இறுதி போட்டிக்கு 6 பாடகிகள் தேர்வு பெற்றனர்.  

இந்த நிலையில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் அக்ஷரா லட்சுமி, அனன்யா, ஹர்ஷினி நேத்ரா, மேக்னா சுமேஷ், ஷ்ரீனிதா மற்றும் ரிச்சா சைஜன் ஆகிய ஆறு போட்டியாளர்கள் தேர்வான நிலையில் இவர்களில்  முதல் பரிசை தட்டி சென்றவர்  ஸ்ரீநிதா  என்று அறிவிக்கப்பட்டது. அவருக்கு 60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது.

இரண்டாவது பரிசை ஹர்ஷினி நேத்ரா பெற்றார் என்பதும் அவருக்கு 10 லட்ச ரூபாய் ரொக்க பரிசு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது பரிசை அக்ஷரா லக்ஷ்மி தட்டி சென்றார். அவருக்கு 5 லட்சம் பரிசு கிடைத்தது.

மேலும் நான்காவது ஐந்தாவது ஆறாவது இடம்பிடித்த 3 போட்டியாளர்களுக்கு தலா 3 லட்சம் பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பரிசை தட்டி சென்ற ஸ்ரீநிதாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீரியல் நடிகையை திருமணம் செய்து கொண்ட ரெடின் கிங்ஸ்லி... ரசிகர்கள் வாழ்த்து...!