திருட்டு டிவிடிகளை இலங்கைத் தமிழர்கள்தான் வெளியிடுகிறார்கள். அவர்களுக்காக போராடினோம் என்று நினைத்தால் அருவருப்பாக உள்ளது என்று பேசி உலகம் முழுவதிலிருந்தும் வாங்கிக்கட்டிக் கொண்டார் சேரன்.
நான் சொன்னது சரிதான், மன்னிப்பெல்லாம் கேட்கப் போவதில்லை என்றவர், சீமான் மன்னிப்பு கேட்க வற்புறுத்தியவுடன் பொதுவெளியில் மன்னிப்பு கேட்டார். மழை விட்டாலும் தூறல் விடவில்லை. சேரனை விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் கடிந்து கொண்டுள்ளார்.
இலங்கை தமிழர் பற்றி சேரன் பேசியது தேவையற்றது என்று குறிப்பிட்டிருப்பவர் இலங்கை தமிழர் மீது குற்றஞ்சாட்டுவது தேவையற்றது, அவர்கள் இப்போதாவது அமைதியாக வாழட்டும் என தெரிவித்துள்ளார்.