Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனவோடு நிறுத்திக்கொள்ளவும்: யூடியுப் பிரசாந்தை கலாய்த்த தயாரிப்பாளர்!

Webdunia
திங்கள், 24 மே 2021 (18:09 IST)
திரைப்படங்களை விமர்சனம் செய்யும் யூடியூப் பிரசாந்த் அவ்வப்போது அரசியல் மற்றும் சமூகக் கருத்துக்களையும் தெரிவித்து நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் அவர் சற்று முன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: 
 
ஒரு ஏக்கர் தோட்டம் . மாமரம், பலா மரம் , கொய்யா மரம், பனை மரம் மற்றும் நிறைய மரங்கள் நிறைந்து. இதற்கு நடுவில் அழகாய் ஒரு வீடு. சாண வாயுவில் எரியும் அடுப்பு , காற்றின் வழியே மின்சாரம். யாரையும் சாரா எளிய வாழ்க்கை ! #என்கனவு . 
 
பிரசாந்தின் இந்த ட்விட்டருக்கு பதிலடி கொடுத்த பிரபல தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் கூறியதாவது: யாரையும் சாராமல் இவ்வளவு விசயம் செய்யனும்னா தினமும் 4 மக்கிரி சாணி அள்ளனும். அவ்வளவு எளிது அல்ல. கனவோடு நிறுத்திக்கொள்ளவும். ஊரில் நம்ம அனுபவம் அப்படி
 
இதனையடுத்து டுவிட்டர் பயனாளிகளும் இந்த இரண்டு டுவிட்டுகளுக்கு கலாய்த்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments