Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாடகர் எஸ்பிபி உடல்நிலை: மருத்துவமனை அறிக்கை

பாடகர் எஸ்பிபி உடல்நிலை: மருத்துவமனை அறிக்கை
, வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (08:15 IST)
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்
 
எஸ்பி பாலசுப்ரமணியன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட செய்தி கேட்டதும் திரையுலகம் அதிர்ச்சி அடைந்தது. அது மட்டுமின்றி அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வந்தனர்
 
இந்த நிலையில் தற்போது எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல் நலம் குறித்து மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல்நலம் சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர் 
 
லும் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகவும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக எஸ்பி. பாலசுப்பிரமணியன் தனது உடல்நிலை பற்றிய ஒரு வீடியோ வெளியிட்டார் என்பதும் அந்த வீடியோவில் தான் நலமாக இருப்பதாக தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துப்பட்டா போடுமா... பிகினி உடையில் மாளவிகாவை கண்டு புகையும் தளபதி ரசிகர்கள்!