Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாடகர் எஸ்பிபி கவலைக்கிடம்: மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

பாடகர் எஸ்பிபி கவலைக்கிடம்: மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
, திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (18:33 IST)
பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் கடந்த இரண்டு நாட்களாக உடல்நிலை தேறி வருவதாக வெளிவந்த தகவலால் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் தற்போது திடீரென அவர் மீண்டும் கவலைக்கிடமாக இருப்பதாக வெளிவந்துள்ள செய்தியால் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர் 
 
சற்று முன்னர் எஸ்பிபி சிகிச்சை பெற்றுவரும் தனியார் மருத்துவமனை அவரது உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்றும், எஸ்பிபி உடல்நிலையை அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது. அவருக்கு மிகச் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 
 
இந்த அறிக்கையால் எஸ்பிபி ரசிகர்கள் மீண்டும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எஸ்பிபி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி அவரது குடும்பத்தினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல இயக்குனர் இறந்துவிட்டதாக வதந்தி – உண்மையை வெளியிட்ட நடிகர்!