Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இப்போது அதுதான் ரொம்ப முக்கியமா? அஜித் வராதது குறித்து எஸ் பி சரண் கருத்து!

Advertiesment
இப்போது அதுதான் ரொம்ப முக்கியமா? அஜித் வராதது குறித்து எஸ் பி சரண் கருத்து!
, திங்கள், 28 செப்டம்பர் 2020 (17:07 IST)
மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமண்யத்தின் இறுதி நிகழ்வுக்கு அஜித் வராதது குறித்து எஸ் பி பி சரண் விளக்கமளித்துள்ளார்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சென்னையில் உள்ள எம் ஜி எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வாரம் அவர் உயிரிழந்தார். அவரின் உடல் அவர் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு உடலுக்கு அவரது திரையுலக நண்பர்களும், ரசிகர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நேரில் செல்ல முடியாதவர்கள் வீடியோ மூலமாகவோ சமூகவலைதளங்கள் மூலமாகவோ தங்கள் இரங்கலை பதிவு செய்தனர்.

ஆனால் எஸ் பி சரணின் வகுப்புத் தோழனும், எஸ் பி பியின் நெருங்கிய தோழருய்மாகிய அஜித் வரவில்லை என்பது சர்ச்சைகளை உருவாக்கியது. இதுகுறித்து இப்போது சரண் விளக்கமளித்துள்ளார். அதில் ‘இதுபோன்ற (கொரோனா) சூழ்நிலையில் வரவேண்டும் என அவசியம் இல்லை. அஜித் எனக்கு மிக நல்ல நண்பர். அவர் வந்தாரா இல்லையா என்பது இப்போது முக்கியம் இல்லை’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இப்படி போஸ்ட் போடாதம்மா பட்டுன்னு ப்ரொபோஸ் பண்ணிடப்போறேன்!