Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரி நடிப்பில் அடுத்து உருவாகும் ‘மாமன்’… பூஜையோடு படப்பிடிப்பு தொடக்கம்!

vinoth
திங்கள், 16 டிசம்பர் 2024 (15:08 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவைக் கலைஞராக இருந்த சூரி வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் மூலம் ஹீரோவானார். அந்த படம் ஹிட்டானதைத் தொடர்ந்து அவர் நடித்த கருடன் மற்றும் கொட்டுக்காளி ஆகிய திரைப்படங்களும் வெற்றிபெற்று அவரை முன்னணிக் கதாநாயகன் ஆக்கின.

இதற்கிடையில்ல் டிசம்பர் 20 ஆம் தேதி விடுதலை இரண்டாம் பாகமும் ரிலீஸாகவுள்ளது. அதன் பிறகு சூரி பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் கதாநாயகன் ஆக நடிக்கவுள்ளார். இந்த படத்தின் கதைக்கருவை சூரி தன்னுடைய சொந்த வாழ்வில் நடந்த சம்பவத்தில் இருந்து எடுத்து அதை கதையாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

அந்த கதைக்கு பிரசாந்த் பாண்டியராஜ் திரைக்கதை அமைக்க சூரியுடன் ஐஸ்வர்யா லஷ்மி, பிரியா மணி மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. கருடன் படத்தைத் தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் குமார் இந்த படத்தையும் தயாரிக்கிறார். இன்று படப்பிடிப்பு பூஜையோடு தொடங்கியுள்ளது. இந்த படத்துக்கு மாமன் எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘ஆடுஜீவிதம்’ படத்திற்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை? ரசிகர்கள் அதிருப்தி

திரையரங்கில் ஹிட்டடித்த ‘பறந்து போ’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பவன் கல்யாணின் ‘ஹரிஹர வீரமல்லு’ படம் படுதோல்வி… இத்தனை கோடி நஷ்டம் வருமா?

50 கோடி ரூபாய் வசூலை அள்ளிய ‘தலைவன் தலைவி’!

அட்லி சார் நீங்கள் சொல்வது போல இது ‘மாஸ்’… தேசிய விருதுக்கு நன்றி தெரிவித்த ஷாருக் கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments