Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹீரோவாகிறார் இருட்டு அறை பட இயக்குனர்!

Cinema
Webdunia
ஞாயிறு, 15 டிசம்பர் 2019 (14:09 IST)
தமிழில் அடல்ட் காமெடி படமான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தை இயக்கிய இயக்குனர் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

தமிழிக் கௌதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. அடல்ட் ரக காமெடி படமான இதை இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயக்குமார். ’இருட்டு அறையில் முரட்டு குத்து’ அடல்ட் இரட்டை அர்த்த வசனங்களுக்காகவும், காமெடிக்காகவும் இளைஞர்களால் பெரிதும் விரும்பப்பட்டாலும், பல சமூக நல அமைப்புகள் அந்த படத்திற்கு எதிர்ப்புகளை தெரிவித்திருந்தன.

ஆனாலும் நல்ல வசூல் பார்த்த அந்த படத்தை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக “இருட்டு அறையில் முரட்டு குத்து 2’ ஐ இயக்க உள்ளார். சந்தோஷ் பி ஜெயக்குமார். இரண்டாம் பாகம் என்று பெயரிட்டிருந்தாலும் இரண்டு படங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் சந்தோஷ் பி ஜெயக்குமாரே ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சாம்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படமும் முதல் பாகம் போன்றே இரட்டை அர்த்த வசனங்கள், காட்சிகள் நிறைந்ததாய் இருக்கும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரொனால்டினோவை சந்தித்த அஜித் மகன் ஆத்விக்.. தலையை தடவி கொடுத்து ஆசி..!

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

அடுத்த கட்டுரையில்
Show comments